பெல் நிறுவனம் முன்பு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்
திருச்சி, ஜூலை 9 ஒன்றிய அரசைக் கண்டித்து இந்தியா முழுவதும் தொழிற்சங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் அண்ணா தொழிற்சங்கம், பாரதீய மஸ்தூர்சங்கம், அம்பேத்கர் யூனியன் சங்கம் ஆகிய மூன்று சங்கங்களை நீங்கலாக மற்ற சங்கங்களான தொமுச, சிஐடியு, ஐஎன்டியூசி, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பணிக்கு வரக்கூடிய தொழிலாளர்களை நுழைவாயில் முன்பு நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஆதரவு கோரி வரும் நிலையில் வேலைக்கு சென்ற தொழிலாளர் ஒருவரின் வாகனத்தை மரித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து போலீசாருக்கும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது