நகை கடன் பெற கட்டுப்பாட்டை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
திருச்சி, மே 26 நகை கடன் பெற பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ள ரிசர்வ் வங்கியை கண்டித்தும் அந்த கட்டுப்பாடுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.