விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை
திருச்சி, பிப். 24 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தேமுதிக திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் தேமுதிக நிறுவன தலைவர் உருவ படத்தை திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர், மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பாரதிதாசன் திறந்து வைத்தார், பிறகு சீகம்பட்டி ஊராட்சி, பொன்சிங்கம்பட்டியிலுள்ள அருள்மிகு மாரியம்மன் திருகோயில் மண்டகபடி அன்னதானம் தேமுதிக சார்பில் நடைபெற்றது.
இதில் மாவட்ட கழக அவைதலைவர், ஒன்றிய கவுன்சிலர் அர்ஜூன், மாவட்ட கழக பொருளாளர் வசந்த் பெரியசாமி, மாவட்ட கழக துணை செயலாளர் சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முல்லைசந்திரசேகர், மணப்பாறை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வேல்முருகன், வையம்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் குமார், மாவட்ட நெசவாளரணி செயலாளர் ஜெயம்சக்திவேல், மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் சாகுல்அமீத், ஒன்றிய அவைதலைவர் குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜப்பா, ஜேசிஐ மணவை கிங்ஸ் தலைவர் குணசேகரன், பாஸ்கர், வல்லரசு சக்திவேல், குமார், முருகேசன், கிருஷ்ணன், பொண்ணுசாமி, முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்