சோமரசம்பேட்டையில் கஞ்சா பறிமுதல் சிறுவன் உட்பட 3 பேர் கைது
திருச்சி, ஆக. 22 திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ள இனியானூரில் சோமரசம் பேட்டை போலீசார் ரோந்து பணி யில் ஈடுபட்டு இருந்தனர். அப் போது, ஒரு ஆட்டோவில் 4 பேர் சாக்கு பையை ஏற்றி கொண்டி ருந்தனர். இதை கண்ட போலீசார் சந்தேகம் அடைந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் ராம்ஜிநகர் மில் காலனியை சேர்ந்த பிர பாகரன் (வயது 46), சங்கீதா (40), ஜெகநாதன் (43) மற்றும் 17 வய துடைய சிறுவன் என தெரிய வந்தது. மேலும் சாக்கு பையை பிரித்து பார்த்தபோது அதில் சுமார் 3 கிலோ 600 கிராம் கஞ்சா இருந்தது தெரியந்தது. அவர்கள் கஞ்சாவை விற்பனை செய்வதற் காக ஆட்டோவில் கடத்தி சென் றுள்ளனர். இதனையடுத்து போலீசார் 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை கைதுசெய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஜெகன்நாதனை தேடி. வருகின்றனர்.