மேஜர் சரவணன் சதுக்கத்தில் மாவட்ட ஆட்சியர் மலர் தூவி மரியாதை
திருச்சி, மே 29 பாகிஸ்தான் – இந்தியா இடையே கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் வீரமரணமடைந்த மேஜர் சரவணன் நினைவு நாளையொட்டி திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவிலுள்ள மேஜர் சரவணன் சதுக்கத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மலர் வளையம் வைத்து, பூக்களை தூவி மரியாதை செலுத்தினார்.