போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்றவர் கைது
திருச்சி ஜூலை 7 திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மலேசியா செல்லும் பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர். அப் போது அது போலி பாஸ்போர்ட் என்று தெரியவந்தது. இனதயடுத்து இமிகிரேசன் அதிகாரி அந்தப் பயணியிடம் தொடர்ந்து விசாரணை செய்தபோது அவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 55 )என தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார் புகார் என்பதில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.