சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
திருச்சி, டிச.18 வையம்பட்டி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது
திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே கரட்டுப்பட்டியைச் சோ்ந்த சிறுமி, அப்பகுதியிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் காட்டில் கடந்த 2021, ஜனவரி தேதி18 மாடு மேய்த்துக் கொண்டிருந்தாா் அப்போது, அங்கு வந்த மணப்பாறை சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சுரேஷ் வயது 34 என்பவா், சிறுமியிடம் வழிகேட்பது போல அருகில் சென்று அவரை மறைவான இடத்துக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.அப்போது சிறுமி கூச்சலிடவே அங்கிருந்த கல்லால் அவரது தலையிலும் நெற்றியிலும் தாக்கி பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளாா்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், மணப்பாறை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்தனா்.இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது வழக்கின் அரசு தரப்பில் வழக்கறிஞர் சுமதி ஆஜர் ஆகினார் அப்பொழுது விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி சண்முகபிரியா நேற்று தீா்ப்பு வழங்கினாா். போக்ஸோ குற்றத்துக்கு 7 ஆண்டுகள், கொலை முயற்சி தாக்குதல் குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். மேலும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டாா் வழங்கப்பட்டது