திருச்சி அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டி கூலித் தொழிலாளி பலி
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மேட்டு இருங்களூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவினை காண சென்ற லால்குடி நெருஞ்சலக்குடி முருகரை நகரைச் சேர்ந்த சூசை என்ற கூலித் தொழிலாளி ஜல்லிக்கட்டு காளை மாடு முட்டியதில் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து சமயபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.