பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்த MIET பொறியியல் கல்லூரி NSS தன்னார்வலர்கள்
MIET இன்ஜினியரிங் கல்லூரியின் NSS தன்னார்வலர்கள், எப்சா அறக்கட்ளை (EPSA Charitable Trust), திருச்சி, அக்டோபர் 28, 2022 வெள்ளியன்று திருச்சியில் உள்ள நவல்பட்டு கிராமத்தில் உள்ள அண்ணா நகரில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க தூய்மை இந்தியா 2.0 இன் கீழ் தூய்மை இயக்கத்தை ஏற்பாடு செய்தனர்.
எப்சா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் D எட்வர்ட் சகாயராஜ் மற்றும் எம்ஐஇடியின் என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் C ஜீவானந்தம் ஆகியோர் கிராமத்தில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை நவல்பட்டு கிராம ஊராட்சித் தலைவர் ஏ ஜேம்ஸிடம் ஒப்படைத்தனர்.