நவீன இறகுபந்து உள்விளையாட்டு அரங்கை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
திருச்சி, மார்ச் 15 திருச்சி மாநகராட்சிக்குட்பட் எஸ்.பி.ஐ காலனியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நவீன இறகுபந்து உள்விளையாட்டு அரங்கினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, ஸ்டாலின்குமார், முக்கிய பிரமுகர் வைரமணி, நகர பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.