கல்வி உரிமையை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழ் வழி கல்வி இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஜூலை 27 திருச்சி -இந்தி திணிப்பு மற்றும் கல்வி உரிமையை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழ் வழி கல்வி இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி ரயில் நிலையம் எதிரே இந்தி திணிப்பு மற்றும் மாநில கல்வி உரிமை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழ் வழி கல்வி இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் சின்னப்பத் தமிழர் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளில் சிபிஎஸ்ஐ பாடத்திற்கு மாறக்கூடாது எனவும் அரசு பள்ளிகளை மூடக்கூடாது தமிழ்நாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர்களை
தேர்வு செய்யும் உரிமையை மாநில அரசே ஏற்க வேண்டும் மேலும் கல்வி உரிமையை மாநிலத்திற்கே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்