திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நினைவுநாள் அனுசரிப்பு
திருச்சி, ஆக.7 முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் 8ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு கழக முதன்மைச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித்துணைத் தலைவர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் மாநகர செயலாளர், மேயர் அன்பழகன் முன்னிலையில் ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார் மத்திய மாவட்ட பொருளாளர் துரைராஜ், கருணை ராஜாமாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துச்செல்வம் விஜய் ஜெயராஜ், இளங்கோ மோகன் தாஸ் கலைச்செல்வி மாணிக்கம் கவிதா சோழன் சம்பத் முத்து பழனி வீரமணி, தஸ்தா பாய் உத்தமர் சீலிராஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.