மக்கள்பாதுகாப்பு இயக்க மாநில தொண்டரணி, மாவட்ட செயலாளர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, டிச.1 திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேவர் சிலைக்கு புதிதாக மாநில தொண்டரணி செயலாளராகவும், திருச்சி மாவட்ட செயலாளர்களாகவும் பதவியேற்றுள்ள ஜெபி என்ற ஜெயராம் பாண்டியன் மாலை அணிவித்து விட்டு மூன்று கோரிக்கைகளை PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் டாக்டர் இசக்கிராஜா தேவர் கோரிக்கையாக எங்கள் கள்ளர் மறவர் அகமுடையார் அனைத்து பிரிவையும் தேவர் என அரசாணை வெளியிட வேண்டும் என்றும் பி.சி.ஆர் சட்டத்தால் சமுதாய மக்களின் இளைஞர்கள் அதிகமாக பொய்யான வழக்குகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதால் பி சிஆர் சட்டத்தை அடியோடு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இதில் திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன் மற்றும் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் திலக் உடன் இருந்தனர்.