தந்தை பெரியார் பிறந்த நாள் : சமூக நாள் உறுதிமொழி ஏற்பு
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், இன்று (17.9.22) மலர்தூவி மரியாதை செலுத்தினார்.இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், அனைத்து அரசு அலுவலர்களும் சமூக நாள் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.அபிராமி உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
