பெல் ஊரகப் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள நாய், கால்நடைகள், குதிரைகளை பிடிக்க கோரி மனு
BHEL ஊரகப் பகுதியில் வசிக்கும், ஊரக வாசிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் மாடு நாய் குதிரை உள்ளிட்ட கால்நடைகளை அப்புறப் படுத்துவது தொடர்பாக, திருவரம்பூர் வட்டாட்சியர் தலைமையில், தொடர்புடைய உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் மற்றும் DTS/AITUC சங்க நிர்வாகிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவுகளை நடைமுறைப் படுத்த கோரி, திருச்சி மாவட்ட ஏஐடியுசி பொதுசெயலாளர் தோழர் க.சுரேஷ், டிடிஎஸ் ஏஐடியுசி பொது செயலாளர் G.லோகநாதன், துணைப் பொதுச் செயலாளர் S.பாலமுருகன் உள்ளிட்ட டிடிஎஸ் ஏஐடியுசி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்து வலியுறுத்தினர்.