வேலை வாய்ப்பு அடையாள அட்டை; அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்…!
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திருச்சி மாநகராட்சி, அபிஷேகபுரம் கோட்டம் 8வது வார்டு குழுமணி சாலைப் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தினைத் தொடங்கி வைத்து வேலை செய்பவர்களுக்கு வேலை வாய்ப்பு அடையாள அட்டையினை வழங்கினார்.

அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், முசிறி சட்டமன்ற உறுப்பினர் ந. தியாகராஜன், மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ. முஜிபுர் ரகுமான், மாமன்ற உறுப்பினர் என்.பங்கஜம் மதிவாணன் ஆகியோர் உள்ளனர். முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு மரக்கன்றுகள் நட்டுவைத்தார்.