திருச்சி மத்திய சிறையில் “போக்சோ” கைதி திடீர் சாவு
திருச்சி அக். 27 கேரளா மாநிலம் பத்தானமித்ரா பகுதியை சேர்ந்தவர் கணேஷ் குமார் (வயது65).இவர் கடந்த மே. 9, மாதம் 23 வருடம் கரூர் மாவட்ட போலீசாரால் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி 5 வருடம் சிறை தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த .24ந்தேதி காலை இரத்த அழுத்தம் காரணமாக, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று கணேஷ் உயிரிழந்தார். இது குறித்து சிறை அதிகாரி அளித்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.