உறையூர் பகுதியில் சாலை நடுவே பள்ளம் : சரி செய்து தர கோரிக்கை
திருச்சி, ஜூன் 28 திருச்சி உறையூர் 10ஆவது வார்டு நவாப் தோட்டம், திருத்தணி ரோடு ஆர்.சி. பள்ளி அருகில் தார்ச்சாலை நடுவே உள்ள பள்ளம் உள்ளது. வாகனயொட்டிகளுக்கு எச்சரிக்கை செய்ய அதில் பொதுமக்கள் செடியை வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாமன்ற உறுப்பினரிடம் புகார் அளித்துள்ளனர். அவர் பள்ளத்தில் மணல் அள்ளி மூடிவிட்டு சென்றுவிட்டார். மீண்டும் அதே இடத்தில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வழிந்தோடுகிறது. இதை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.