துவரங்குறிச்சி பகுதியில் இன்று மின்தடை …
துவரங்குறிச்சி பகுதியில் இன்று நவம்பர் 24 மின்விநியோகம் இருக்காது என மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் பொ.பிரபாகரன் தெரிவித்துள்ளார் .இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை நவம்பர் 24 மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது .இதனால் மின் நிலையத்தில் மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான துவரங்குறிச்சி , அழகாபுரி ,அலம்பட்டி , நாட்டார் பட்டி , அதிகாரம் , சடவேலாம்பட்டி, உசிலம்பட்டி , ஆலம்பட்டி, இக்கரை கோசிகுறிச்சி , சிவந்தம்பட்டி ,தெத்தூர், செவல்பட்டி ,பிடாரப்பட்டி, வெங்கட் நாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி ,நல்லூர், பில்லுப்பட்டி ,யாகாபுரம் ,கள்ளப்பட்டி ,பொருவாய் வேலக்குறிச்சி மருங்காபுரி ,காரைப்பட்டி, கரடிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, சிங்கிலிபட்டி, எம் இடையப்பட்டி, மற்றும் பழைய பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9. 45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.