அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முன்னேற்பாடு கூட்டம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில்மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் நாளை (மே 14) நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மகளிர் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார் உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.