பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாள் : அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, டிச.19 இனமான பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சியில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே என் நேரு தலைமையில் மறைந்த இனமான பேராசியர் அன்பழகன் 103- வது பிறந்த நாளை முன்னிட்டு தில்லை நகரில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்க மத்திய மாவட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன் , சேர்மன் துரைராஜ் மாவட்ட துணைச் செயலாளர் விஜயா ஜெயராஜ், கருணாநிதி பகுதி செயலாளர்கள் கமல் முஸ்தபா மோகன்தாஸ் இளங்கோ மண்டல தலைவர் துர்கா தேவி ஒன்றிய செயலாளர்கள் கே கே ஆர் சேகரன், வீரபத்திரன் , முத்து பழனி கவிதா உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்