புளியஞ்சோலை சுற்றுலா தளம் மூடல்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது புளியஞ்சோலை இது இபகுதியில் உள்ள நாமக்கல் சேலம் பெரம்பலூர் திருச்சி கரூர் ஆகிய மாவட்டம் மக்களுக்கு சுற்றுலா தளமாக விளங்கும் புளியஞ்சோலையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
கடந்த சில தினங்களா கொல்லிமலை
நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பெய்த கனமழையின் காரணமாக புளியஞ்சோலை ஐயாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக ஏற்பட்டதுள்ளது. ர். கொல்லிமலை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் நேற்று முதல் புளியஞ்சோலை அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி புளியஞ்சோலை ஆற்றுக்கு செல்லவும் அங்கு குளிக்கவும் பொது மக்களுக்கு தடை விதித்து இருப்பதாகவும் பாதுகாப்பு காரணம் காரணமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் நீர்வரத்து குறைந்த பின்னர் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.