திருச்சி ஸ்ரீரங்கத்தை சோர்ந்த சேஷாத்திரி என்பவா் ஆன்லைன் மூலம் உலர் பழங்களை தனது கிரடிட் கார்டு மூலம் ரூ.6 ஆயிரத்து 872-க்கு ஆர்டர் செய்தார். ஆனால் தான் ஆர்டர் செய்த பொருள் தனக்கு கிடைக்கவில்லை என்ற காரணத்தால்,மேற்கண்ட நபர்களை தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்தும் தொடர்பு கொள்ள இயலவில்லை என்றும்,எனவே தனது பணத்தை மீட்டுத்தரக்கோரி ஆன்லைன் மூலம் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
கோலீசார் விசாரணை மேற்கொண்டதில் சேஷாத்திரியின் பணம் அவரது வங்கி கணக்கிற்கு திரும்ப கிடைக்கும் வகையில் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்தனர்.