கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை: 3 பேர் கைது
திருச்சி, நவ.24 திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்டக் கண்காணிப்பாளருக்கு வந்த புகாரின் அடிப்படையில் மணப்பாறை காவல் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்த பொழுது அப்பகுதியில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்த மூன்று நபர்களை பிடித்து அவர்களிடமிருந்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டு மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.