திருச்சியில் நுரையீரல் சிறப்பு மருத்துவம் குறித்த கருத்தரங்கு
நுரையீரல் சிறப்பு மருத்துவம் கிரியோதெரபி மற்றும் ஈபஸ் குறித்த கருத்து அரங்கம் திருச்சியில் நடைபெறுவது குறித்து டாக்டர் ஜி விஸ்வநாதன் மருத்துவமனை மருத்துவர் ராஜ் திலக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டாக்டர் ஜி விஸ்வநாதன் மருத்துவமனை சார்பில் கிரையோ தெரபி மற்றும் ஈபஸ் மூலம் குழந்தைகளுக்கான நுரையீரல் பரிசோதனை மற்றும் துரோஸ்கோஸ்கோப்பி போன்ற சேவைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கமானது வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது இந்த நிகழ்ச்சியில் தேசிய வல்லுநர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விரிவுரைகள் மற்றும் விலங்கு மாதிரிகளின் செய்முறை பயிற்சி மற்றும் கிரையோ தெரபி சிகிச்சையும் நேரடி ஒளிபரப்பு செய்கின்றனர்.
இதன் மூலம் நுரையீரலில் உள்ள கட்டியை கண்டறிதல் கட்டியினுடைய பரவல் மற்றும் நிலைகளை கண்டறிதல் மேலும் வேறு திசுக்களில் உள்ள காசநோய் சார்கோயில் போன்ற நோய்களை கண்டறியும் உதவுகிறது கிரியோ தெரபி மூலம் நுரையீரல் கட்டி வருவதற்கும் அதை அகற்றுவதற்கும் மேலும் மூச்சுக் குழாயில் ஏதேனும் அடைப்பு இருந்தால் அதை அகற்றுவதற்கும் இது பயன்படுகிறது என தெரிவித்தார்.