தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

0 110
Stalin trichy visit

திருச்சி, டிச.6  தெற்கு  மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில், சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி இ.பி. ரோட்டில் அமைந்துள்ள சட்ட மேதை அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாநகரச் செயலாளர் மு. மதிவாணன்  தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வன்னை அரங்கநாதன்  ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

நிகழ்வில் மாநில இலக்கிய அணி புரவலர் செந்தில் மாவட்டத் கழக நிர்வாகிகள் கோவிந்தராஜ் மூக்கன், குணசேகரன் பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், பாபு, மணிவேல், விஜயகுமார் சிவக்குமார் வட்டக் கழகச் செயலாளர் மனோகர் மற்றும் மாவட்ட, மாநகர, மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், மாவட்ட – மாநகர – தொகுதி அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.