மெல்ல கற்கும் செல்ல குழந்தைகளுக்கான சிறப்புத் திறன்கள் திருவிழா…
அந்த நல்லூர் ஒன்றிய அளவிலான மெல்ல கற்கும் செல்ல குழந்தைகளுக்கான சிறப்புத் திறன்கள திருவிழா ஸ்ரீரங்கம் தேவித் தெரு நகராட்சி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அந்த நல்லூர் ஒன்றிய அரசுப் பள்ளிகளில் மாற்றுத்திறனுடைய மற்றும் கற்றல் குறைபாடுடைய 150 குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைத்திறன்கள் வெளிப்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த நல்லுார் வட்டாரக்கல்வி அலுவலர் மருதநாயகம் தலைமையில் நடைபெற்றது. சிவக்குமார் கல்வியாளர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் . கல்வியாளர் இராஜேந்திரன் கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். பேராசிரியர் பிரபாகர் ஹோலிகிராஸ் சொசைட்டி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார். சுந்தரம் BHEL வாழ்த்துரை வழங்கினார். பாரதிதாசன் பல்கலைகழக சமுகப்பணித்துறை அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கினர்.
