கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள்
திருச்சி, ஜன.5 திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் மாவட்ட விளையாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவில் இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் வேல்முருகன், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.