எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி, நவ.17 எஸ் ஆர் எம் யூ ரயில்வே தொழிற்சங்கத்தின் ரயில்வே ஓடும் தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி கண்டன போராட்டம் திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையம் பகுதியில் உள்ள ஓடும் ரயில்வே தொழிலாளர்கள் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் மயில்வாகனன் தலைமையில் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் SRMU ரயில்வே தொழிற்சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது 50% சதவீதம் DAஉயர்வுக்கு ஏற்ற கிலோமீட்டர் அளவன்ஸ் 1.1. 24 முதல் உயர்த்ல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கிலோமீட்டருக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சுதாகரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.