மணப்பாறை தாலுகா அலுவலகத்தில் பணியாளர்கள் வெளிநடப்பு
மேற்கு மண்டல துணை வட்டாட்சியர் தாக்கப்பட்டதை கண்டித்து மணப்பாறை தாலுகா அலுவலகத்தில் பணியாளர்கள் வெளிநடப்பு செய்தனர்
திருச்சி காஜாமலை வங்கி ஊழியர்களுடன் திருச்சி மேற்கு மண்டல துணை வட்டாட்சியர் பிரேம் குமார் அவர்கள் ஜப்தி நடவடிக்கையாக சென்றபோது அங்கிருந்த இருபதுக்கு மேற்பட்ட குண்டர்கள் தாக்கப்பட்டதில் அவர் படுகாயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
தற்போது இதனை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மணப்பாறை தாலுகா அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் வெளிநடப்பு செய்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கண்டனக் கோஷங்களை எழுப்பினர்