மகளின் காதல் விவகாரத்தால் மனஉளைச்சல் : தொழிலாளர் தற்கொலை
திருச்சி நவ. 3- திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ வீரர் காலனி ஒன்பதாவது
தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 41). இவரது மகள் காதல் விவகாரத்தில் சிக்கினார்.
இதுகுறித்து மனைவி ராதிகா கணவரிடம் தெரிவித்தார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ரவி கடந்த மாதம் தற்கொலைக்கு முயன்றார் பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றினர். இந்த நிலையில் மீண்டும் மன உளைச்சலில் இருந்த ரவி யாரும் எதிர்பாராத வகையில் மகளின் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார் இது குறித்து ராதிகா கொடுத்த புகாரின் அடிப்படையில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்