லால்குடி அரசு கல்லூரியில் இயற்பியல் துறையில் மாணவர் மன்ற விழா
திருச்சி, பிப்.12 திருச்சி மாவட்டம், லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறையில் மாணவர் மன்ற விழாவிற்கு கல்லூரி முதல்வர் த.ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
திருச்சி ஸ்ரீமத் ஆண்டவர் கலைக்கல்லூரியின் டீன் பேரா.மது(Former CSIR scientist )சிறப்புரை ஆற்றினார். துறைத்தலைவர்கள் மஞ்சுளாதேவி, சகாயராஜ், அசோக்குமார், வீரமணி, சுலைமான், ஜெயப்பிரகாஷ்,எழில் பாரதி, தமிழ்மணி,சின்னத்தம்பி, ஷேக்அப்துல்லா,மற்றும்கிருஸ்ணவேனி,ரூபாதேவி,சதீஸ்,சரவணன், பரமேஸ்வரன் ,சிவகாமி,காஞ்சனா தேவி,பானுமதி ,மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை பேரா.கலைச்செல்வி ஒருங்கிணைத்தார் . இயற்பியல் துறைத்தலைவர் அனிதா வரவேற்றார். பேரா.கவிமணி நன்றி கூறினார்.