தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை : சீரமைக்க கோரிக்கை
திருச்சி, டிச. 4 திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகலாபுரம் ஊராட்சியில் ராஜவீதி பகுதியில் சுமார் 6,95,000 மதிப்பிலான சிமெண்ட் சாலை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிதாக போடப்பட்டுள்ளது
சிமெண்ட் ஜல்லி மற்றும் மணல் சரியான அளவு முறையில் பயன்படுத்தாமல் சாலை போடப்பட்டுள்ளதால்
இந்த சாலையானது தரமற்ற முறையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் மக்களின் வரிப்பணம் அரசு அதிகாரிகள் வீணடிப்பதாக குற்றம் சற்றி உள்ளனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலையை ஆய்வு செய்து சீரமைத்து தர வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்