ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

0 147
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 3  திருச்சியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாமை  முதன்மை செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி தில்லைநகரில் உள்ள அவரது இல்லத்தில் உறுப்பினராகி இந்த உறுப்பினர் சேர்க்கை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்த்தோப்பு, தில்லைநகர், பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து அப்பகுதியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மாநகர மேயர் அன்பழகன், தகவல் தொழில் நுட்ப அணி மண்டல பொறுப்பாளர் கேசவன், திருச்சி மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஏ கே அருண், மேற்கு தொகுதி அமைப்பாளர் கோவிந்து, மாமன்ற உறுப்பினர் கமால் முஸ்தபா, மோகன்தாஸ் கனகராஜ் கனகராஜ் ராமதாஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர்கலந்து கொண்டனர்,

Leave A Reply

Your email address will not be published.