சிறுநீரகத் தொற்றால் இறந்த ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்திற்கு மாநகர காவல் ஆணைர் நிதியுதவி
திருச்சி மாநகர் ஊர்க்காவல் படையில் கடந்த 18.01.2011ம் தேதி முதல் பணிபுரிந்து வந்த எஸ்.வெங்கடேசன் என்பவர் மஞ்சள் காமாலை நோய் தொற்று ஏற்பட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 09.01.2022 அன்று சிகிச்சை பலனின்றி இறந்தார் – அவரது குடும்பத்தினர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு உதவும் வகையில் திருச்சி மாநகர ஊர்க்காவல் படை காவலர்களிடம் திரட்டிய 70 ஆயிரம் ரூபாய்க்கான தொகையை அவரது மனைவி சின்னம்மாளிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் இன்று வழங்கினார்.