ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டுமானப் பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, மே 4 திருச்சி மாவட்டம், லால்குடி ஊராட்சி ஒன்றியம், டி.வளவனூர் கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ 5.23 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதியதாகக் கட்டப்பட்டு வரும் சமையலறைக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.