திருச்சியிலிருந்து மீண்டும் ரயில்கள் இயக்கம்
கொரோனா பரவல், ஊரடங்கு காரணமாக திருச்சி கோட்டத்தில் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.இந்நிலையில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், தஞ்சையிலிருந்து சென்னை செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் உள்பட பல ரயில்கள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.காரைக்குடியிலிருந்து சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் இன்று காலை முதல் வழக்கம் போல இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.