திருச்சி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் இன்று 14 இடங்களில் கோவிட் தடுப்பூசிகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது – அதே போல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்ரீரங்கம், அரியமங்கலம்,பொன்மலை மற்றும் கோ- அபிஷேகபுரம் உள்ளிட்ட நான்கு இடங்களில் சுமார் 2400 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது.
ஊரக பகுதிகளில் மருத்துவ முகாம்கள் வாயிலாக 5800 நபர்களுக்கு இன்று கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது.
திருச்சி சுகாதர மாவட்டத்தில் இதுவரை 5,20,396 நபர்களுக்கு கொரோனோ தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதுஎன்று சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராம்கணேஷ் தெரிவித்துள்ளார்.