திருச்சியில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
திருச்சியில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் தேவர் மன்றம், கலைஞர் அறிவாலயம் மற்றும் அரியமங்கலம், கோ.அபிசேகபுரம், ஸ்ரீரங்கம், பொன்மலை ஆகிய மாநகராட்சி கோட்ட அலுவலகங்களில் இன்று(மே25) காலை 7 முதல் 10 மணி வரை நடைபெறுகிறது. இதில் செய்தி மற்றும் ஊடகத்துறையினர், பால் வியாபாரிகள், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள், தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள், பள்ளிக்கல்லூரி ஆசிரியர்கள், விமான நிலைய பணியாளர்கள், தன்னார்வல தொண்டு நிறுவனங்களை சார்ந்தோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.