திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்பு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையர் திரு. சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் இன்று மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவு நாளில் அரசு உத்தரவின்படி, கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதேபோல் ஸ்ரீரங்கம் கோட்டம் அரியமங்கலம் கோட்டம் பொன்மலை கோட்டம் மற்றும் கோ-அபிசேகபுரம் கோட்டங்களில் உதவிஆணையர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகரப்பொறியாளர் எஸ். அமுதவள்ளி , உதவி ஆணையர் திரு. திருஞானம், ச.நா.சண்முகம் .சி.பிரபாகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்