திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் அரசு மருத்துவமனையில் அதிகாரிகளுடன் ஆலோசனை
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் நேற்று (ஜுன்11) மாலை 7 மணி அளவில் திருச்சி புத்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் மருத்துவ கல்லூரி டீன் வனிதா மற்றும் மருத்துவ அதிகாரிகள் ஆகியோருடன் கோவிட் சிகிச்சை பற்றியும் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் என்னவென்று கேட்டறிந்து ஒன்றிய , மாநில அரசுகளுடன் பேசி ஆவன செய்வதாகவும் ஏற்கனவே ஒதுக்கீடு செய்த எம்பி நிதியின் பயன்பாடுகள் பற்றியும் ஆலோசனை மேற்கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராஜன் பொதுக்குழு உறுப்பினர்கள் ரெக்ஸ்கோபால் மற்றும் எழிலரசன் அண்ணாதுரை மணிவேல் முரளி புத்தூர் சார்லஸ் மலர் வெங்கடேஷ் வழக்கறிஞர் விக்னேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்