துறையூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கை வசதியுடன் கூடிய கட்டடத்தை அமைக்க அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
திருச்சி மாவட்டம் துறையூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கை வசதியுடன் கூடிய கட்டத்தை அமைப்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், தியாகராஜன், இணை இயக்குநர் (குடும்பநலம்) டாக்டர் லட்சுமி, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தர்மர் ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர்.