மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து திருச்சி ரயில் நிலையத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவு 2 மணி அளவில் வந்தது. 6-வது நடைமேடையில் நிறுத்தப்பட்ட அந்த ரயிலில் திருச்சி ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸ்
சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார் ரயிலின் ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர். அப்போது திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்வதற்காக வடமாநிலத்தில் இருந்து
3 சிறுவர்களை ஏஜென்டுகள் அழைத்து வந்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் மீட்ட போலீசார், அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.