திருச்சி மாநகராட்சியில் உள்ள மொத்தம் 65 வார்டுகளில் 589 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் மக்கள் செல்வாக்கில் வெற்றி பெற்றுவிடலாம் என சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். இவர்களால் வாக்குகள் பிரிந்து வெற்றி வாய்ப்பை மாற்றும் நிலை உருவாகியுள்ளது. திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை சுயேட்சையாக நிற்கும் ஒரு சிலர் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு நிகழ்வுகளையும்,செய்திகளையும் உடனுக்குடன் தெரிவித்து முன்னணியில் இருக்கும் “திருச்சி மெயில்” இணைய செய்தி நிறுவனம் பொதுமக்களிடம் நடுநிலையுடன், துல்லியமான பிரம்மாண்ட கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. அதன்படி வெற்றி வாய்ப்பு யாருக்கு, தோல்வி யாருக்கு என்ற விவரம் வருமாறு:-



