திருச்சி மாவட்டம் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் எம்.கே.ராஜ்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
தமிழக அரசு உயர்கல்விதுறை அறிவித்துள்ள அறிக்கையின்படி முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2021-2022ம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு இளங்கலை வகுப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் ஆன்லைன் இணையதள வழியாக வரும் 10.8.2021 தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்படுகின்றது. மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் வேலை நாட்களில் கல்லூரி சேவை மையம் அல்லது அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறப்பட்டுள்ளது.