திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தளுதாளப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவிராஜ்குமார்(வயது 38), லாரி ஓட்டுனரான இவருக்கு சங்சீதா என்ற மனைவியும், 14 வயதிற்குட்பட்ட மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். ரவிராஜ்குமார் லாரி ஓட்டுனராக வேலை செய்துவரும் நிலையில் மூத்த மகள்
(14 வயது) என்றும் பாராமல் பலமுறை பாலியல் வன்மம் செய்துள்ளார்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது சங்கீதா தனது மகளின் அழும் சத்தம் கேட்டு பார்த்தபோது தன் கணவர் தனது மக்களிடம் அத்துமீறி நடந்து கொள்வது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சங்கீதா புகார் அளித்ததின் பேரில் போலீசார் லாரி ஓட்டுநரும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ரவிராஜ்குமார் மீது வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/IFC5JrQzHnf9WurwIfJTIH