2 ஓட்டு போட்ட கவுன்சிலர் மீது போட்டாச்சு வழக்கு!
திருச்சி மாநகராட்சி 56வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த மஞ்சுளா தேவி வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் அன்று அவர் 56வது வார்டுக்கு உட்பட்ட கருமண்டபம் ஆரம்பப்பள்ளி ஓட்டுச்சாவடி பாகம் எண் 646 மற்றும் 647 ஆகிய இரு ஓட்டுச்சாவடிகளில் ஓட்டு போட்டார். இது சர்ச்சையானது. வேட்பாளரே கள்ள
ஓட்டு போட்டதால் மஞ்சுளாதேவியை கவுன்சிலர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அவரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டு இரண்டாமிடம் பிடித்த கவிதா திருச்சி செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.