புதுச்சேரியை சேர்ந்தவர் ராஜ்கிரண் (வயது 24). ராம்ஜிநகர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள மசாஜ் சென்டருக்கு சென்றார். அங்கிருந்த ஊழியர் இரு பெண்களை அரைகுறை ஆடையுடன் நிறுத்தி உல்லாசமாக இருக்க பணம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து ராஜ்கிரண் அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் மசாஜ் சென்டரில் சோதனை நடத்தினர். அப்போது நாகை மாவட்டம் வேதாரண்யம் கலைஞர்(37), விடுதி மேலாளர் ரவி(49) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 பெண்களை மீட்ட போலீசார் அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.