கொரோனா நோய் தடுப்பு குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுடன் திமுக எம்எல்ஏ. சீ.கதிரவன் ஆலோசனை.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக எம் எல்.ஏ சீ.கதிரவன் கொரோனா நோய் தடுப்பு குறித்து ஆலோசனையில் ஈடுப்பட்டார்.மண்ணச்சநல்லூர் தொகுதியில் 35 கிராம ஊராட்சிகள் உள்ளது.தற்போது கொரோனா தொற்றின் 2 ம் அலை வேகமாக பரவி வருவதால் கொரோனா நோய்த்தொற்றை தடுக்க ஊராட்சி மன்ற தலைவர் களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுக எம்எல்ஏ கதிரவன் ஆலோசனை செய்தார்.இந நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஸ்ரீதர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்