விவசாயிகளிடம் பழங்களை பெற்று முதியோர் இல்லங்கள், காவல்துறையினர், மருத்துவப் பணியாளர்களுக்கு வழங்கினார் – திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனிவிஜயா
ஊரடங்கு காலத்தில் விவசாயிகளிடம் பழங்கள் பெற்று முதியோர் இல்லங்கள், காவல்துறையினர், மருத்துவ பணியாளர்களுக்கு திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் ஆனி விஜயா அவர்கள் வழங்கினார்! ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அவர்களிடம் இருந்து பழங்களை மொத்தமாக விலைக்கு பெற்று முதியோர் இல்லங்கள், காவல்துறையினர், மருத்துவ பணியாளர்களுக்கு, உலக மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தோடு இணைந்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் ஆனி விஜயா அவர்கள் வழங்கினார் விவாசய பெண்மணி மொத்தமாக 80 கிலோ பழங்களை அவர்களிடம் பெற்றது இன்றைய சூழலில் அவர்கள் குடும்பித்திற்கு பெரிய உதவியென மிகவும் உற்சாகமாக திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களிடம் தமிழக அரசுக்கும் காவல்துறையினருக்கும் நன்றி கூறினார்SRM மருத்துவ கல்லூரியில் கோவிட் வார்ட் பணியாளர்களுக்கு பழங்கள், நீம் சோப், உணவு பொருட்கள் வழங்கினார்.தனது சரகத்திற்கு உட்பட்ட கரூர் மாவட்ட எல்லையில் உள்ள சாந்தி வனம் இல்லத்தில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு மதிய உணவும் வழங்கினார்.